ஈரோடு பத்திரிகையாளர் நலன்கருதி அரசு ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது இல்லை by ஆசிரியர் March 25, 2026 written by ஆசிரியர் March 25, 2026 0 comments 10 Reading Mode பத்திரிகையாளர் நலன்: அறிவிப்புகள் ‘ஆனை’ அளவு… செயல்பாடுகள் ‘பூனை’ அளவு! இது தேர்தல் கால கண்துடைப்பா? தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசுத் துறை ஊழியர்கள் முதல் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது தமிழக அரசு. அந்த வரிசையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கள நிலவரமோ இந்த அறிவிப்புகளுக்கு நேர்மாறாக, “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற கதையாகவே உள்ளது. பல ஆண்டு கால அங்கீகாரம்… 2 ஆண்டு கால காத்திருப்பு! தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையாகப் பணியாற்றி, அரசு வழங்கிய அங்கீகார அட்டை (Accreditation Card) வைத்திருக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குமுறல்கள் எழுந்துள்ளன. பல மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதிய அங்கீகார அட்டைகள் வழங்கப்படாமலும், பழைய அட்டைகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டும் முடங்கிக் கிடக்கின்றன. அங்கீகார அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் என்று விதிமுறை இருக்கும்போது, அந்த அட்டையையே வழங்காமல் அல்லது புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்துவிட்டு, “ஓய்வூதியத்தை உயர்த்துகிறோம்” என்று அரசு கூறுவது பயனற்ற அறிவிப்பாகவும் வேடிக்கையாக உள்ளது. வெறும் 398 நபர்களுக்கா இந்த ஆரவாரம்? மார்ச் 2026-ன் தரவுப்படி, ஒட்டுமொத்த தமிழகத்திலும் வெறும் 398 பத்திரிகையாளர்கள் மட்டுமே அரசு ஓய்வூதியப் பட்டியலில் உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றும் ஒரு துறையில், மிகச் சிறிய அளவிலான நபர்களுக்கு மட்டும் பலன்களை வழங்கிவிட்டு, அவர்களை வைத்து வாழ்த்து பாட வைத்துவிட்டு ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமூகத்தையே வாழ்த்திவிட்டதாகப் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியம் (Journalists Welfare Board) தொடங்கப்பட்டதோடு சரி, இதுவரை உருப்படியான எந்தச் சலுகைகளையும் தரைமட்டத்தில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது. 3,600-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ள நிலையில், சொற்பமானவர்களுக்கே பெயரளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. அங்கீகார அட்டை கடந்த 2 ஆண்டுகளாகப் பலருக்கு வழங்கப்படவில்லை புதுப்பிக்கப்படவில்லை.மாதாந்திர ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்தவர்கள் யார்ர்க்கும் இதுவரை பலருக்குச் சரியாகச் சென்றடையவில்லை நல வாரியச் செயல்பாடுகள் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டாலும், நடைமுறைச் செயலாக்கம் பூஜ்யம். பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு என்ற அறிவிப்பு மக்களை ஏமாற்றுவது போல் பத்திரிக்கையாளர்களையும் ஏமாற்றும் தேர்தல் அறிவிப்புகள் ரூ. 12,000-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்வு (தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும்) தான். பத்திரிகையாளர்களின் உழைப்பை அங்கீகரிப்பது என்பது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடக் கூடாது. 20 ஆண்டுகளாகத் துறையில் இருக்கும் மூத்த செய்தியாளர்களுக்கே உரிய அங்கீகாரம் கிடைக்காத போது, புதிய அறிவிப்புகள் அனைத்தும் தேர்தல் கால “கண்குடைப்பு” (Eye-wash) நாடகமாகவே பார்க்கப்படும். அரசு உண்மையாகவே பத்திரிகையாளர்கள் மீது அக்கறை கொண்டால், முதலில் முடங்கிக் கிடக்கும் அங்கீகார அட்டை நடைமுறையைச் சரிசெய்து, தகுதியுள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றிச் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த அறிவிப்புகள் அனைத்தும் காகிதப் பூக்களாகவே எஞ்சும்! இதையும் சில ஜால்ராக்கள் அரசை குறை கூறுவதாக எண்ணினால் நான் ஒன்றும் செய்ய இயலாது Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default journal Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.