ramnad பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 27 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் – பதிவாளர் மகாலட்சுமி கைது !!? by ஆசிரியர் June 24, 2026 written by ஆசிரியர் June 24, 2026 0 comments 6 Reading Mode பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 27 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் – பதிவாளர் மகாலட்சுமி கைது !!? இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், ரூ.27 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமி யை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். தகவலின்படி, நிலம் தொடர்பான பதிவுப் பணியை மேற்கொள்வதற்காக மனுதாரரிடம் ரூபுய்.27,000/- லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய சோதனையில், லஞ்சத் தொகையை பெற்றபோது சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமியை கையும் களவுமாக கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கைது சம்பவம் பரமக்குடி பதிவு அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காரைக்குடி மாநகராட்சியில் 15 லட்சம் நிதி முறைகேடு ! லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு !!? next post சமூக ஊடக மோசடிகள் ! ஸ்ரீலங்கா போலீசார் எச்சரிக்கை !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.