tamilnadu சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதன்மை நோக்கம் ! ஐஜி விளக்கம் !!? by ஆசிரியர் June 11, 2026 written by ஆசிரியர் June 11, 2026 0 comments 1 Reading Mode சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதன்மை நோக்கம் ! ஐஜி விளக்கம் !!? தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முதலமைச்சர் விஜய்யால், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற புதிய பிரிவு மிகுந்த உத்வேகத்துடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பெண் அதிரடிப்படையின் பொறுப்பாளரான ஐ.ஜி பவானீஸ்வரி, இந்த படை ஒரு குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதே இந்தப் படையின் முதன்மை நோக்கமாகும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு ரூபாய் 357 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், அதிரடிப்படைக்காகவே பிரத்யேகமாக காவல்துறையில் 2,545 புதிய காவலர் பணியிடங்களை உருவாக்கி, மாநிலம் முழுவதும் 270 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு நேரடியாக FIR பதிவு செய்யும் அதிகாரம் உள்ளதா?’ அதற்கான பதிலை ஐ.ஜி விளக்கமாக கூறியுள்ளார்.முதற்கட்டமாக, பெண்கள் அதிகமாக நடமாடும் மற்றும் பணிபுரியும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிரடிப்படையினர் நேரடியாகச் சென்று பெண்களுடன் கலந்துரையாடுவார்கள். அவர்களிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்பு குறித்த தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், ஏற்கெனவே குற்றங்கள் நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து, அதனை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளையும் வழங்குவார்கள். மேலும், காவல்துறையினர் உடனடியாகச் செல்ல முடியாத அல்லது கண்காணிப்பதற்குக் கடினமான பகுதிகளில், இரவு நேரக் கண்காணிப்புப் பணிகளுக்காக 47 நவீன ட்ரோன்கள் (Drones) பயன்படுத்தப்பட உள்ளன. இத்துறையில் உள்ள காவலர்களுக்குப் பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், காவல்துறையினருடன் இணைந்து தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர். தற்காலத்தில் பெண்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் அதிகளவில் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய ஐ.ஜி பவானீஸ்வரி, எந்தவொரு பெண் இணையவழி (Cyber) தொல்லைகளுக்கு ஆளானாலும், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உடல் ரீதியான தொல்லைகள் மட்டுமன்றி, பெண்களுக்கு ஏற்படும் மனரீதியான தொல்லைகளுக்கும் காவல்துறை மிகக் கடுமையாகச் செயல்படும் என்று முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்த அதிரடிப்படை மூலம் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு நேரடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யும் அதிகாரம் உள்ளதா?’ எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது ஒரு குற்றங்களைத் முன்கூட்டியே தடுக்கும் (Preventive) படை என்பதால், சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு தொடர்பாக உள்ளூர் காவல்துறையினரும் குழந்தைகள் நலக் குழு உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்” என்று தெளிவுபடுத்தினார். இவ்வாறு சிங்கப்பெண் அதிரடிப்படை பொறுப்பாளர் ஐஜி பவானீஸ்ஸரி இந்த அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்து தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default singapen ig bhavaneeshwari Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ! ஐஜி பவானீஸ்வரி அற்புத விளக்கம் !!? next post சட்டவிரோத மது விற்பனை ! மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.