theni district சட்டவிரோத மது விற்பனை ! மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !!? by ஆசிரியர் June 13, 2026 written by ஆசிரியர் June 13, 2026 0 comments 2 Reading Mode சட்டவிரோத மது விற்பனை ! மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !!? போடி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை:மாவட்ட ஆட்சியர் மரு. இரா.வைத்தியநாதன் நடவடிக்கை . போடிநாயக்கனூர் வட்டம், அகமலை கிராமத்தில் சில நபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகிறார்கள் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு குறுஞ்செய்தி வரப்பெற்றது. இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உடனடி அறிவுறுத்தலின் பேரில் தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினரால் அகமலை கிராமத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினரின் திடீர் சோதனையின் போது அகமலை கிராமத்தை சேர்ந்த த.மணி என்பவர் சட்டவிரோதமாக மதுபானங்கள் வைத்து விற்பனை செய்து வந்தது. மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்படி நபரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதன்மை நோக்கம் ! ஐஜி விளக்கம் !!? next post விமானப்படை ஓடுதளத்தில் தர இறங்கிய விமானம் தீப்பிடித்து விபத்து !? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.