tenkasi கடையநல்லூர் காவல்துறையின் துரித நடவடிக்கை ! தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு !!? by ஆசிரியர் June 8, 2026 written by ஆசிரியர் June 8, 2026 0 comments 2 Reading Mode கடையநல்லூர் காவல்துறையின் துரித நடவடிக்கை ! தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு !!? தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சுந்தரேஸ்வரத்தை சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் ரத்தினவேல் பாண்டியன். இவர் ரஹ்மானியாபுரம் முதல்தெரு காவல் ஆய்வாளர் குடியிருப்பு அருகே டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற செய்யது என்பவர் 85 கிராம் நகை பெட்டியை சாலையில் தவற விட்டு சென்றுவிட்டார். இதை கவனித்த ரத்தினவேல் பாண்டியன் அந்த தங்க நகைப் பெட்டியை எடுத்துதீ திறந்து பார்த்த பொழுது 85 கிராம் நகைகள் இருந்தது. உடனே அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டதில் நகைக்கு உரிமையாளர்கள் அடையாளம் தெரியாததால் அதனை கடையநல்லூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அலெக்ஸிடம் ஒப்படைத்தார் . தகவல் அறிந்து செய்யது தன்னுடைய தங்கையுடன் காவல் நிலையம் வந்தார். நகை சாலையில் தவறவிட்டது குறித்து தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கிறிஸ்டி முன்னிலையில் ரத்தினவேல் பாண்டியன் தங்க நகைகளை தவறவிட்ட செய்யதிடம் ஒப்படைத்தனர். சாலையில் தவறவிட்ட நகை கிடைத்ததில் அண்ணன் தங்கை இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர், நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ரத்தினவேல் பாண்டியனுக்கு பாராட்டு தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default jewels missing Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பேருந்தில் பணப்பையை திருடிய ஜோடிகள் ! சில நிமிடங்களில் கைது செய்த காவல்துறை !!? next post ஒன்றரை வயது குழந்தையை கொன்ற கொலைகாரன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள் !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.