theni தேனி மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – கலெக்டர் ரஞ்சித் சிங் தகவல். by ஆசிரியர் May 7, 2026 written by ஆசிரியர் May 7, 2026 0 comments 3 Reading Mode தேனி மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – கலெக்டர் ரஞ்சித் சிங் தகவல். தேனி, அரசினர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 11.05.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்16 நிறுவனங்கள் கலந்து கொண்டு (Designated trade)\ஐடிஐயில் குறிப்பிட்ட தொழிற்பிரிவு பயின்ற பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சிக்கு 420-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பஉள்ளனர். இம்முகாமில் NCVT மற்றும் SCVT முறையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற/ பெறாத அனைத்து பயிற்சியாளர்களும் கலந்து கொள்ளலாம். மேலும், ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற இயலாத 8, 10, 12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவர்களுக்கு 18 நிறுவனங்கள் கலந்து கொண்டு10 1785-க்கும் மேற்பட்ட விருப்பப்பாட பயிற்சி (Optional Trade) இடங்களை நிரப்ப உள்ளனர். நேரடியாக தொழில் சாலைகளில் சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சி, ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி(Apprenticeship Training) பெற்று தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாத உதவித்தொகையும், பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், ஓராண்டு வயது வரம்பு சலுகையும் உள்ளது. எனவே தொழில் பழகுநர் பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள் இந்த முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜித்சிங் தெரிவித்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default collector Ranjith Singh Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜித் சிங்தொடங்கி வைத்தார். next post காவல்துறை எச்சரிக்கை!?தூத்துக்குடி எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் – பண மோசடி முயற்சி உஷார்! Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.