INDIA வீர தீர விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்வில் நாட்டையே கண்கலங்க வைத்த சம்பவம் !!? by ஆசிரியர் June 16, 2026 written by ஆசிரியர் June 16, 2026 0 comments 4 Reading Mode வீர தீர விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்வில் நாட்டையே கண்கலங்க வைத்த சம்பவம் !!? ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற கீர்த்தி சக்ரா விருது வழங்கும் விழாவில் நடந்த ஒரு காட்சி, நாடு முழுவதையும் கண்கலங்க வைத்தது… கீர்த்தி சக்ரா விருதை பெற தனது மகனுக்குப் பதிலாக மேடையேறிய ஒரு தாய்… மகனின் வீரதீரச் செயல்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வார்த்தையும் அவரது மனதில் மகனின் நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தது. துக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த தாய் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். அந்த தருணத்தைக் கண்ட இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், நெறிமுறைகளைக் கூட மறந்து அந்த தாயை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். ஒரு குடியரசுத் தலைவராக அல்ல, மற்றொரு தாயாக அவர் காட்டிய அந்த அன்பு அனைவரின் இதயத்தையும் நெகிழ வைத்தது. ஆனால் , அந்த தாயின் கண்ணீருக்குப் பின்னால் ஒரு மாவீரனின் வரலாறு இருக்கிறது…அவர் தான் இந்திய இராணுவ வீரர் சிப்பாய் ஜஞ்சல் பிரவீன் பிரபாகர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் பிரபாகர், சிறுவயதிலிருந்தே நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர். அந்த கனவை நனவாக்கி இந்திய இராணுவத்தில் இணைந்து, பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். 2024 ஜூலை 6 அன்று ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும் பின்வாங்காமல் முன்னேறிய பிரவீன் பிரபாகர், தன்னுடைய சக வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணிச்சலுடன் போராடினார். கடுமையான காயம் ஏற்பட்ட நிலையிலும் அவர் போராட்டத்தை நிறுத்தவில்லை. இறுதி மூச்சு வரை போராடி பயங்கரவாதிகளை வீழ்த்திய அவர், நாட்டைக் காக்கும் பணியில் வீரமரணம் அடைந்தார்.அவரது ஒப்பற்ற வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் விதமாக, இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரதீர விருதான “கீர்த்தி சக்ரா” அவருக்கு மரணத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டது. வீரமரணம் அடைவதற்கு சில காலத்திற்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஒரு பக்கம் கணவனை இழந்த மனைவி, மறுபக்கம் மகனை இழந்த தாய்… ஆனால் இருவரின் முகத்திலும் கண்ணீரோடு கலந்த பெருமை இருந்தது. ஏனெனில் அவர்கள் இழந்தது ஒரு குடும்ப உறுப்பினரை மட்டுமல்ல, இந்த நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த ஒரு மாவீரனை.இன்று அந்த தாயின் கண்ணீர், ஒரு குடும்பத்தின் துயரத்தை மட்டும் சொல்லவில்லை. இந்த நாட்டின் எல்லைகளை பாதுகாக்க தங்கள் உயிரையே அர்ப்பணிக்கும் ஆயிரக்கணக்கான வீரர்களின் தியாகத்தையும் நினைவுபடுத்தியது. ஒரு வீரன் உயிரிழக்கும் போது, ஒரு குடும்பம் மட்டுமல்ல… ஒரு தேசமே அவருக்கு தலைவணங்குகிறது. மாவீரர் சிப்பாய் ஜஞ்சல் பிரவீன் பிரபாகருக்கு வீர வணக்கம்!அவரது தியாகமும் வீரமும் என்றும் இந்தியர்களின் இதயங்களில் வாழும். ஜெய்ஹிந்த்…. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default keerthi chakra viruthu Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இராமநாதபுரத்தில் சட்டத்தை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த , வீரக் காவலருக்கு வீரவணக்கம் !!? next post இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு !! You may also like மரணத்தின் விளிம்பிலும் மாவீரம் ! வீரத்தின் மறு பெயர் மீனாட்சி... June 14, 2026 இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஸ் சேத்... June 14, 2026 விமான விபத்தில் மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் !! June 14, 2026 மூன்று ஆண்டுகளாக முட்டிக்கொண்ட ஐஏஎஸ் – ஐபிஎஸ் மோதல் மத்தியஸ்தர்... June 14, 2026 விமானப்படை ஓடுதளத்தில் தர இறங்கிய விமானம் தீப்பிடித்து விபத்து !? June 13, 2026 இந்திய ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர்... June 2, 2026 அதிர்ச்சி !!? பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய... June 1, 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மூத்த தாவரவியல் ஆசிரியை... May 17, 2026 இந்தியா அக்னி-6 ஏவுகணை சோதனையில் வெற்றி!? May 9, 2026 இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!! May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.