Thoothukudi தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை ! வாலிபர் ஒருவர் கைது !!? by ஆசிரியர் June 17, 2026 written by ஆசிரியர் June 17, 2026 0 comments 0 Reading Mode தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை ! வாலிபர் ஒருவர் கைது !!? தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த வாலிபரை வடபாகம் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரைச் சாலை அருகே வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். சோதனையில், அவர் விற்பனைக்காகத் தன்வசம் கஞ்சா வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் நீலகண்டன் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, கஞ்சா வைத்திருந்த முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னையா மகன் சின்னத்துரை (எ) கண்ணன் (வயது 25) என்பவரைக் கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் ! ஒருவர் கைது !!? next post சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ! ஏழு ஆண்டுகள் சிறை !! போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.