erode ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி ! ஒரே நாளில் 562 போலீசார் இடமாற்றம் !!? by ஆசிரியர் June 20, 2026 written by ஆசிரியர் June 20, 2026 0 comments 0 Reading Mode ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி ! ஒரே நாளில் 562 போலீசார் இடமாற்றம் !!? தமிழக காவல் துறையில் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் காவலர்களைப் பணியிட மாற்றம் செய்யும் நடைமுறை பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் பிரம்மாண்ட அளவில் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்களைப் பணியிட மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஐபிஎஸ்., அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 166 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 562 போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களுக்குப் புதிதாக ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்குச் சென்று உடனடியாகப் பணியில் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பொதுப் பணியிட மாற்றத்தின் போது, பவானி சப்-டிவிசனுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றவே பெரும்பாலான காவலர்கள் ஆர்வம் காட்டி விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். இதனால், அங்குள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட, அங்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த காவலர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default transfer Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் !!? next post புதுவை கடற்கரை காவல் ராணி ! மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்க முகம் காட்டும் பெண் ஆய்வாளர் !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.