puthucherry புதுவை கடற்கரை காவல் ராணி ! மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்க முகம் காட்டும் பெண் ஆய்வாளர் !!? by ஆசிரியர் June 20, 2026 written by ஆசிரியர் June 20, 2026 0 comments 0 Reading Mode புதுவை கடற்கரை காவல் ராணி ! மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்க முகம் காட்டும் பெண் ஆய்வாளர் !!? புதுவை கடற்கரை பாதுகாப்பு பெண் ஆய்வாளர் திருமதி. பூரணி இவரது நற்பண்பு மற்று நற்பணியால் இவருக்கு புதுவை மக்கள் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்களும் இவருடைய ரசிகர்கள். வெளி மாநிலத்திலிருந்து புதுவை கடற்கரை சுற்றுலாவிற்கு வரும் பலருக்கும் இவர் முகமும் பெயரும் பரிச்சயம். பொதுமக்களிடம் இவரை போன்று ஒரு அதிகாரியின் அணுகுமுறையை வைத்து தான் ஒட்டுமொத்த புதுவை காவல்துறை கண்ணியமும், மாண்பும் வெளி மாநிலத்தவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றால மிகையாகாது. வார இறுதியில் கடற்கரையில் சுற்றுலா வாசிகளால் உள்ளூர் வாசிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், உள்ளூர் வாசிகளால் சுற்றுலா வாசிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் தைரியமாக சென்று தட்டிக் கேட்டு அப்பிரச்சனையை அங்கேயே சுமுகமாக தீர்த்து வைக்க கூடிய கைதேர்ந்த அனுபவசாலி. புதுவை தட்டாஞ்சாவடியில் பிறந்து அரசு பள்ளியில் பயின்றவர், தன்னுடைய ஆய்வாளர் பணியின் 36 ஆம் வருடத்தில் இருக்கிறார். காலம் டிஜிட்டலாகி விட்டது, பொது மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்கம் முகம் காட்டும் காவல் அதிகாரிகளை தான் இனி மக்கள் விரும்புவர் கொண்டாடுவர். அவ்வகையில் என்றும் புதுவை மக்களின் வரவேற்புக்கும், கொண்டாடத்திற்க்கும் தகுதியுடையவர் இந்த கடற்கரை காவல் ராணி. இவரின் பணி மென்மேலும் சிறக்க நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது வாழ்க காவல்துறை ! வளர்க இவரின் சேவை !! Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default inspector poorani Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி ! ஒரே நாளில் 562 போலீசார் இடமாற்றம் !!? next post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை, கரூர் காவல்துறையினர் சென்னையில் தேடுதல் வேட்டை !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.