TirupatthurUncategorized உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி !!? by ஆசிரியர் June 26, 2026 written by ஆசிரியர் June 26, 2026 0 comments 4 Reading Mode உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த தலைமை காவலர் சிலம்பரசன் உடல் நலக்குறைவால் கடந்த 30/07/2025 அன்று உயிரிழந்தார். நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிலம்பரசனின் குடும்பத்திற்கு 2011 இல் அவருடன் காவலர் பணியில் இணைந்த சக காவலர்களின் குழு ரூபாய் 25,52,000/- ( இருபத்தைந்து லட்சத்து ஐம்பத்து இரண்டு ஆயிரம் மட்டும் ) நிதி உதவி வழங்கியுள்ளது. இந்த நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் பி அக்ஷய் அனில் வாகரே முன்னிலையில் உயிரிழந்த தலைமை காவலரின் மனைவி செந்தமிழ்ச்செல்வி,மகன் லக்சன் சாய் (வயது 6 )மற்றும் மகள் சாமீனி (வயது 5) ஆகியோரிடம் காசோலையாக வழங்கப்பட்டது. இதில் லக்சன் சாய் மற்றும் ஷாமினி ஆகிய இரு குழந்தைகளின் பெயரில் 22 லட்சத்து 19,670 வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலம்பரசனின் மனைவிக்கு 3,32,330 காசோலையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்த காவலரின் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி ஊக்குவித்தார் சக காவலரின் குடும்பத்திற்கு இத்தகைய துயரமான நேரத்தில் துணையாக நிற்பது தங்களின் கடமை என நிதி உதவி அளித்த காவலர்கள் தெரிவித்தனர். காவல் துறையினரின் இந்த மனிதநேய மிக்க செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default nithi uthavi Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காரைக்குடியில் களைகட்டும் சட்டவிரோத மசாஜ் மையங்கள் ! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை !!? next post மணப்பாறை இளம் பெண்ணிடம் ரூபாய் 22 – லட்சம் மோசடி !வாலிபர் கைது !!? You may also like மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 அஜித் குமார் மரணம் ! வெளிவந்தது மர்மம் !! சிபிஐ... June 7, 2026 ஆதரவற்ற மூதாட்டிக்கு நல்வாழ்வை ஏற்படுத்திய ஸ்டாலின் ஐபிஎஸ். நிமிர் குழு... June 3, 2026 குமரி மக்களின் மனம் கவர்ந்த பாதுகாவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின்... May 13, 2026 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் –... May 7, 2026 வனம் அழியும் அவல நிலை!! குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல்... May 7, 2026 சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு –... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.