tuticorin முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பைக் விபத்தில் மரணம்?? by ஆசிரியர் May 10, 2026 written by ஆசிரியர் May 10, 2026 0 comments 10 Reading Mode முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பைக் விபத்தில் மரணம்?? தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் நிகழ்ந்த பைக் விபத்தில் முறப்பநாடு காவல் நிலையத்தில் பணியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்! நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அரவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் வேல்பாண்டி (வயது 32). இவர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று வேல்பாண்டி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் முறப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் நெல்லை கே.டி.சி நகர் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண், எதிர்பாராத விதமாக வேல்பாண்டியின் பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேல்பாண்டிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்பாண்டி, 09/05/2026 சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்துப் பாளையங்கோட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டர் ஓட்டிய பெண் குறித்தும், விபத்து நடந்த விதம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 32 வயதே ஆன இளம் அதிகாரி விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default si velpandi death Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரியில் போக்சோ சிறப்பு விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட எஸ்பி டாக்டர். ஆர். ஸ்டாலின் வெளியிட்டார்!! next post ஆதாய கொலை வழக்கு! 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!! காவல் அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு!!!? You may also like புதூர் போலீசார் திடீர் சோதனை!?பணம் வைத்து சூதாடிய நால்வர் கைது!? May 13, 2026 க்யூ பிரிவு போலீசார் அதிரடி !?இலங்கைக்கு கடத்த முயன்ற ₹... May 13, 2026 காவல்துறை எச்சரிக்கை!?தூத்துக்குடி எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் –... May 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.