tuticorin புதூர் போலீசார் திடீர் சோதனை!?பணம் வைத்து சூதாடிய நால்வர் கைது!? by ஆசிரியர் May 13, 2026 written by ஆசிரியர் May 13, 2026 0 comments 14 Reading Mode புதூர் போலீசார் திடீர் சோதனை!?பணம் வைத்து சூதாடிய நால்வர் கைது!? புதூர் அருகே மயானத்தில் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளக்கட்டான்குறிச்சி சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்துச் சூதாடுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த குளக்கட்டான்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் (48), முனியசாமி (57), கணேசன் (46), லட்சுமணன் (47) ஆகிய 4பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 5,000/- ரொக்கப் பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime suthattam Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post க்யூ பிரிவு போலீசார் அதிரடி !?இலங்கைக்கு கடத்த முயன்ற ₹ 5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல் !? next post திருநெல்வேலி மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு !! You may also like க்யூ பிரிவு போலீசார் அதிரடி !?இலங்கைக்கு கடத்த முயன்ற ₹... May 13, 2026 முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பைக் விபத்தில் மரணம்?? May 10, 2026 காவல்துறை எச்சரிக்கை!?தூத்துக்குடி எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் –... May 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.