dintigul பழனி காவல்துறையின் அதிரடி !? நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது! ஐந்து பவுன் நகை மீட்பு!! by ஆசிரியர் May 7, 2026 written by ஆசிரியர் May 7, 2026 0 comments 8 Reading Mode பழனி காவல்துறையின் அதிரடி !! நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது !? பழனி அருகே டூவீலரில் வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் செயின் பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது!? திண்டுக்கல் மாவட்டம் பழனி, இந்திரா நகரை சேர்ந்த பிரேமா(50) இவர் டூவீலரில் சென்றபோது ரூக்குவார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில், ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில், சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியை சேர்ந்த நண்டு (எ) மாரீஸ்வரன் (வயது 23), சிவகங்கையை சேர்ந்த ஜெயராமன் (வயது 25) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். காவல்துறையின் சீறிய பணியால் திருடு போன நகை மீட்டு உடனடியாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் காவல்துறையை பெரிதும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default DSP dhananjayan Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறை எச்சரிக்கை!?தூத்துக்குடி எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் – பண மோசடி முயற்சி உஷார்! next post காவல்துறை குழந்தைகளுக்கு, சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத். ஐபிஎஸ். பணம்! பாராட்டு!! வாழ்த்து!!? You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.