dintigul திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை ! பொதுமக்களால் குவியும் பாராட்டுக்கள் !!? by ஆசிரியர் June 16, 2026 written by ஆசிரியர் June 16, 2026 0 comments 6 Reading Mode திண்டுக்கல் எஸ்பி பிரதீப் ஐபிஎஸ் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள் !!? திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மிகச் சிறப்பான முறையில் சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து தற்போது பணியிட மாறுதல் பெற்று பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பிரதீப் ஐபிஎஸ் அவர்களின் சாதனைகள்!! திண்டுக்கல் மாவட்ட அளவில் மாநகர பொதுமக்கள், வியாபாரிகள் பாதுகாப்பு பயணம் மேற்கொள்ள பல்வேறு பணிகளை செய்து தந்தவர். பழனி கொடைக்கானல் விழா காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தவர். ரோடு சேப்டி கூட்டங்களில் மாவட்ட அளவில் விபத்து ஏற்படும் இடங்களை குறிப்பிட்டு அந்த இடங்களில் பாலங்கள் அமைப்பது மின் உயர கோபுர லைட் அமைப்பது சென்டர் மீடியனில் பாதுகாப்பு உபகரணங்கள் வைப்பது லைட் வசதி ஏற்படுத்துவது சம்பந்தமாக கூட்டத்தில் பேசி பணி செய்து கொடுத்தவர். திண்டுக்கல் வத்தலகுண்டு ரோட்டில் அதிக விபத்து ஏற்பட்டது சென்டர் மீடியனில் சிறிய பைப் வைத்து வாகனங்கள் வேக கட்டுப்பாடு ஏற்படுத்தி கொடுத்த பின்பு விபத்து இல்லாத ரோடு பகுதியாக வத்தலகுண்டு ரோடு பகுதியை மாற்றினார். உயர்திரு எஸ்பி பிரதீப் அவர்கள் கவனத்திற்கு குறைபாடு கடிதம் சென்றாலே உடனடியாக சரி செய்து தீர்வு ஏற்படுத்தியவர். திண்டுக்கல் புறநகர் பைபாஸ் சாலைகளில் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள எவ்வளவு முயற்சி எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு பணி செய்து கொடுத்தவர். எஸ்பி தனிப்பிரிவு செல் நம்பரில் குறைபாடு தெரிவித்தாலே அடுத்த நிமிடத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் சென்று விடும் அனைவரும் பாராட்டு தெரிவிக்கும் செல் நம்பர் எஸ்பி தனிப்பிரிவு செல் நம்பர். மொத்தத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆன்மீக தளம் சுற்றுலா தளம் இப்பகுதிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வசதி விழாக்காலங்களில் ஏற்படுத்திக் கொடுத்து மறக்க முடியாத பணி பணி செய்து மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர். திண்டுக்கல் மாவட்டத்திற்கு செய்து கொடுத்த பணிகள் அனைவரும் மறக்க முடியாத பணியாகும். சென்ற இடமெல்லாம் செவ்வனே பணி செய்து உங்களின் இப்பணி மென்மேலும் வளர்ச்சி அடைய திண்டுக்கல் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default pratheep ips sathanai Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நெல்லை காவல் துறையினரின் துரித நடவடிக்கை ! குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சித்த நால்வர் கைது !!? next post திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா விற்பனையாளர் இருவர் கைது !!? You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.