திண்டுக்கல் பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ கஞ்சா பறிமுதல் !! பெண் கைது !!!? by ஆசிரியர் July 6, 2026 written by ஆசிரியர் July 6, 2026 0 comments 5 Reading Mode பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ கஞ்சா பறிமுதல் !! பெண் கைது !!!? திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, (05.07.2026)இல் கிடைத்த நம்பகமான ரகசிய தகவலின் அடிப்படையில், பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையிலான காவல்துறையினர். ஆடலூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவரிடமிருந்து 2.240 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில், அவர் பாண்டியம்மாள் (வயது 60). க.பெ. ஜெயக்கொடி, வேலுப்பிள்ளை தெரு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் என்பதும் தெரியவந்தது. மேலும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அய்யம்பாளையம் பகுதியில் வசிக்கும் 25 முதல் 30 வயதுடைய அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, ஆடலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறிய பொட்டலங்களாகப் பிரித்து, ஒரு பொட்டலத்தை ரூ.500க்கு விற்பனை செய்து வந்ததாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட 2.240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட பாண்டியம்மாள் மீது பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கஞ்சாவை வழங்கியதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்சரிக்கை: போதைப்பொருள் விற்பனை. கடத்தல் மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், அவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், இ.கா.ப. அவர்கள் எச்சரித்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி !!? next post குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு !!? You may also like திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர்... July 26, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை... July 26, 2026 பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி... July 6, 2026 வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6... July 5, 2026 திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார்... July 5, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.