திண்டுக்கல் திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார் நடத்தியவர் கைது !!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 4 Reading Mode திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார் நடத்தியவர் கைது !!? திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், IPS அவர்களின் வழிகாட்டுதலின்படியும், பழனி காவல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படியும், கீரனூர் காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் அவர்களின் தலைமையில், சாமிநாதபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜமுருகன், தலைமை காவலர் 1861 ரெங்கநாதன் மற்றும் காவலர் 727 சரவணன் ஆகியோர் சாமிநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குருவன்வலசு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை அருகே செயல்பட்டு வந்த பாரில், உரிமம் காலாவதியான பின்னரும் அனுமதியின்றி மது அருந்த அனுமதித்ததுடன், அங்கு மது அருந்தியவர்களுக்கு திண்பண்டங்களும் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சட்டவிரோதமாக பார் நடத்திய கருப்பையா என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மக்கள் நலன் காக்கும் மரியாதைக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , அதிரடி காட்டுவாரா !!? next post வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6 பேர் கைது !!? You may also like திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர்... July 26, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை... July 26, 2026 பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ... July 6, 2026 பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி... July 6, 2026 வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6... July 5, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.