கன்னியாகுமரி குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில் சொத்து !! நீதிமன்றம் மூலம் மீட்பு !!!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 9 Reading Mode குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில் சொத்து !! நீதிமன்றம் மூலம் மீட்பு !!!? திருடிய பணத்தில் மனைவி பெயரில் வாங்கிய நிலத்தை நீதிமன்றம் மூலம் கையகப்படுத்தி கன்னியாகுமாரி மாவட்ட காவல்துறை அதிரடி! கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு குற்றங்களை தடுக்கும் முயற்சியின் ஒரு மைல்கல் நடவடிக்கை! கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புறாக்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி புஷ்பம் (வயது 38) இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். பின்னர் வந்து பார்க்கும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் விசாரணையில் வீட்டில் திருடு போனது தெரிய வந்த நிலையில் உடனே பளுகல் காவல் நிலைய குற்ற எண் 11/2026 U/S 331, 357, 380 IPC r/w 331 (3), 331 (4), 305 (a) BNS பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவுப்படி, மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் பளுகல் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கேரளா மாநிலம் காட்டாக்கடை, புலநாடு பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் என்பவரின் மகன் உன்னி கிருஷ்ணன் (வயது 53) என்பது தெரிய வந்தது இதனையடுத்து குற்றவாளியை கைது செய்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் உன்னி கிருஷ்ணன் கொள்ளை அடித்த நகை மற்றும் பணத்தின் மூலமாக கேரள மாநிலம் நெய்யாற்றின் கரைப் பகுதியில் அவரது மனைவி பெயரில் சுமார் 8.40 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் நிலம் வாங்கியது தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடைய உத்தரவில் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பளுகல் காவல் நிலைய போலீசார் தகுந்த ஆதாரங்களை குழித்துறை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளி திருடிய பணத்தில் தன்னுடைய மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default assets recover Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும் கேமரா !!? next post பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி !!? You may also like கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு ,... July 7, 2026 குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும்... July 5, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால்... July 5, 2026 காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.