kanyakumari குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !! குற்றவாளிகள் கைது !!! by ஆசிரியர் June 16, 2026 written by ஆசிரியர் June 16, 2026 0 comments 3 Reading Mode கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அதிரடி: 7 திருட்டு பைக்கள் பறிமுதல், குற்றவாளிகள் கைது ! கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனைத் தடுத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.ஸ்டாலின் IPS. அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாகனங்கள் திருடப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளைத் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் வாகனத் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் வாகனங்களின் விவரம்: கோட்டார் காவல் நிலைய குற்ற எண் 200/26 U/S 303(2) BNS Act மற்றும் மேலும் இரண்டு வழக்குகளில் குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம் மேலூர் பகுதி சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் அஜித்குமார் (28) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். வடசேரி காவல் நிலைய குற்ற எண் 210/26 மற்றும்159/26 U/S 303(2) BNS Act வழக்கின் குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம் மேலூர் பகுதி சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் அஜித்குமார் (28) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அஞ்சுகிராமம் காவல் நிலைய குற்ற எண் 149/26 U/S 303(2) BNS Act. வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் செல்வராஜ் (31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஆரல்வாய்மொழி காவல் நிலைய குற்ற எண் 210/26 U/S 303(2) BNS Act வழக்கின் குற்றவாளியான திருவட்டார் சத்துவிளை தோப்பு பகுதியை சேர்ந்த பெனெட் டேவிட் என்பவரின் மகன் மஜின் (26) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R. ஸ்டாலின் IPS. அவர்கள் எச்சரித்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default tiruttu vakanankal parimuthal Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி வைத்து தூக்கிய காவல்துறை !!? next post போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் ! ஒருவர் கைது !!? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 குற்றங்களை முன் கூட்டியே தடுக்க காவல்துறை தீவிர பணியாற்ற வேண்டும்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.