kanyakumari கனிமவள லாரிகளின் அனுமதி சீட்டை கண்டு கொள்ளாத காவலர்கள் பணியிடை நீக்கம் !? மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடி !!? by ஆசிரியர் June 1, 2026 written by ஆசிரியர் June 1, 2026 0 comments 3 Reading Mode குமரி கனிம வள லாரிகளின் அனுமதி சீட்டை பரிசோதிக்காமல் அனுமதித்த மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் !? மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அதிரடி !! நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக அளவு கனிம வள கடத்தல் நடந்து வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் அதிக அளவு விபத்துகளும் நடந்து வந்தது. மேலும் போலி அனுமதி சீட்டு மூலம் கனிம வளங்கள் கனரக டாரஸ் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். ஆனால் அதை எல்லாம் மீறி புது புது வழிகளில் கனிமவள கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. மேலும் கனிமவள கடத்தல் கும்பல்கள் சோதனை சாவடியில் போலி அனுமதி சீட்டுகளை உண்மை என கூறி போலீசாரை ஏமாற்றி கனிமவள கடத்தல்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு வழி சாலையில் உள்ள குமாரபுரம் அருகே காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் கனிமவள லாரிகளின் அனுமதிச்சீட்டை முறையாக சோதனை செய்யாமல் அனுமதித்ததாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்பி சோதனை சாவடியில் இருந்த மூன்று போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். குறிப்பாக அருமனை காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் கோபால், ஈத்தாமொழி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் வினோத், கன்னியாகுமரி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் வாட்சன் ஆகியோர் குமாரபுரம் சோதனை சாவடியில் பணியில் இருந்ததும் அவர்கள் தான் கனிம வள வாகனங்களின் அனுமதிச்சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சோதனை சாவடியில் பணியாற்றும் போலீசார் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் பணியிடை நீக்கம் மட்டுமல்லாது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி எச்சரித்து உள்ளதால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்ட எஸ்பி யின் அதிரடி நடவடிக்கையால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் இனி அதிக விழிப்புடன் பணியாற்றுவார்கள் என்பதுதான் தற்போதைய நற்செய்தியாக உள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பட்டுக்கோட்டை போலீசாரின் அதிரடி சோதனை ! சிக்கிய 300 கிலோ குட்கா !! ஒருவர் கைது !!!? next post அதிர்ச்சி !!? பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய சம்பவம்!!? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.